நிதி நெருக்கடி: குடும்பத்தைக் கொன்று இந்தியர் தற்கொலை
லாஸ் ஏஞ்சலெஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செலஸ் நகரில் வசித்து வந்த கார்த்திக் ராமானுஜம் என்கிற எம்.பி.ஏ பட்டதாரி, நிதிப் பிரச்சினை காரணமாக தனது மனைவி, மாமியார், குழந்தைகளைக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
தமிழகத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் ராமானுஜம். இவர் தனது மனைவி, இரு குழந்ைதகள் மற்றும் மாமியாருடன் லாஸ் ஏஞ்செலஸில் வசித்து வந்தார்.
எம்.பி.ஏ. படித்துள்ள கார்த்திக் பல மாதங்களாக வேலையில்லாமல் இருந்து வந்தார். இதனால் குடும்பத்தை நடத்துவது பெரும் சிரமமாக மாறியது. வேலையும் இல்லாமல், குடும்பத்தையும் நடத்த முடியாமல் போனதால் பெரும் விரக்தி அடைந்த அவர் திங்கள்கிழமை இரவு கோபத்தில், தனது மனைவி, மாமியார், இரு குழந்தைளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். பின்னும் தன்னையும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அடுத்த நாள் காலையில் அவரது வீடு திறந்த நிலையில் இருந்ததைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீஸுக்குத்தகவல் கொடுக்கவே போலீஸார் விரைந்து வந்தனர். அப்போது ஐந்து பேரும் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தனர்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கார்த்திக் ராமானுஜம் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதில் நிதிப் பிரச்சினை காரணமாக இந்த முடிவை எடுத்ததாக கார்த்திக் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா முழுவதும் பெரும் நிதிப் பிரச்சினை தாண்டவமாடி வரும் நிலையில், நிதிப் பிரச்சினை காரணமாக குடும்பத்தைக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட கார்த்திக்கால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications