காஷ்மீரின் முதல் ரயிலை தொடங்கி வைக்கிறார் மன்மோகன் சிங்
ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்கின் முதல் ரயில் என்ற பெருமையைப் பெற்றுள்ள பட்காம் - நெளவ்காம் இடையிலான ரயிலை பிரதமர் மன்மோகன் சிங் சனிக்கிழமை தொடங்கி வைக்கிறார்.
மத்திய காஷ்மீரையும், ஸ்ரீநகரையும் இந்த ரயில் இணைக்கிறது. இந்த ரயிலின் தொடக்க விழாவுக்காக 2 நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குப் பிரதமர் மன்மோகன் சிங் சனிக்கிழமை பயணம் செய்கிறார்.
பட்காம் ரயில் நிலையத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் இந்த ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
மிக குறுகிய தொலைவிலான ரயிலாக இருந்தாலும் கூட இதுதான் காஷ்மீர் பள்ளத்தாக்கின் முதல் ரயில் என்பது குறிப்பிடத்தக்கது. வர்த்தக ரீதியிலான பயணம் தொடங்க சற்று நாளாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தவிழாவில் இந்தியா - பாகிஸ்தான் உறவு குறித்த சில முக்கிய அறிவிப்புகளையும் பிரதமர் வெளியிடுவார் எனத் தெரிகிறது.
வெள்ளிக்கிழமை உதம்பூருக்கு பிரதமர் வருகிறார்.அங்கு 450 மெகாவாட் பாக்லிகார் மின் உற்பத்தித் திட்டத்ைத அவர் தொடங்கி வைக்கிறார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிரதமர் தொடங்கி வைக்கும் 2வது மின் திட்டம் இது. கடந்த ஏப்ரல் மாதம் தல் ஹஸ்தி மின் திட்டத்தை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications