For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழகம், புதுவையில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆயுத பூஜை இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
நவராத்திரி விழாவின் முக்கிய அம்சங்களில் ஒன்றான ஆயுத பூஜை இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி கோவில்களில் விசேஷ வழிபாடுகள் நடத்தப்பட்டன. மக்கள் கோவில்களுக்கு சென்று சாமி கும்பிட்டனர். வீடுகளை சுத்தப்படுத்தியும், வீட்டில் உள்ள பொருட்களுக்கு படையலிட்டும் சாமி கும்பிட்டனர்.
வாகனங்களை கழுவி சுத்தப்படுத்தி அவற்றுக்கு சந்தனம், குங்குமம் வைத்து வழிபாடுகள் செய்யப்பட்டன.
நவராத்திரி விழாவின் நிறைவு நிகழ்ச்சியான விஜயதசமி எனப்படும் சரஸ்வதி பூஜை நாளை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.
Comments
Story first published: Wednesday, October 8, 2008, 14:26 [IST]