For Daily Alerts
Just In
செசன்யாவில் நிலநடுக்கம் - 13 பேர் பலி - நூற்றுக்கணக்கில் காயம்
மாஸ்கோ: செசன்யாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். கட்டட இடிபாடுகளில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
செசன்யாவில் உள்ள காக்கசஸ் மலைப் பகுதியில் இந்திய நேரப்படி நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு பயங்கர நிலநடுக்கும் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ரிக்டராக பதிவானது. இதில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. 3 குழந்தைகள் உள்பட 13 பேர் பலியாயினர்.
கட்டட இடிபாடுகளில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சாலைகளும் நாசமடைந்துள்ளது. மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்று செசன்ய அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
அண்டை நாடுகளான ஜார்ஜியா மற்றும் ஆர்மீனியாவிலும் நில நடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments
Story first published: Sunday, October 12, 2008, 13:51 [IST]