கர்நாடகாவில் பஸ்கள் மோதி விபத்து: 10 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கோலார்: கர்நாடக மாநிலம் கோலாரில் 2 அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பயணிகள் 10 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
திருப்பதியில் இருந்து பெங்களூர் நோக்கி கர்நாடக மாநில அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. கோலார் அருகே சென்று கொண்டிருந்தபோது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது.
இன்று அதிகாலையில் இரண்டு பஸ்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பயணிகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனற். மேலும் 19 பேர் படுகாயமடைந்தனர்.
அவர்கள், பெங்களூரில் உள்ள மருத்துவமனையிலும் கோலார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து கோலார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications