ஆந்திராவில் வன்முறை: 6 பேர் உயிருடன் எரித்து கொலை

ஆந்திர மாநிலம் அடிலாபாத் மாவட்டம் பைன்ஸா நகரில் கடந்த வெள்ளிக்கிழமை துர்கா சிலை ஊர்வலம் நடந்தது. அப்போது இரு பிரிவினருக்கு இடையே கலவரம் மூண்டது. அதைத் தொடர்ந்து வெடித்த வன்முறையில் 4 பேர் படுகொலை செய்யப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
பதட்டம் தொடர்ந்ததை அடுத்து பைன்ஸா நகரிலும் அதன் சுற்றுபுற பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு பைன்ஸா நகருக்கு 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வடோலி கிராமத்துக்குள் கலவர கும்பல் புகுந்து வன்முறைய கட்டவிழ்த்தது. கிராமத்தில் இருந்த சில வீடுகளுக்கு தீ வைத்து கொளுத்தினர். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
தகவலறிந்த போலீஸார் மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அதற்கு தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 6 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 5 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் அங்கு மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஆந்தர மாநிலத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. பெயின்ஸா நகரிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் போலீஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கலவரம் குறித்து விசாரிக்க சிபிஐக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாநில உள்துறை அமைச்சர் ஜன ரெட்டி, டிஜிபி எஸ்எஸ்ஜி யாதவ் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
-
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications