கூட்டுவதற்கு முன்பே தோற்ற அனைத்துக் கட்சி கூட்டம்! - சு.சாமி கிண்டல்
சென்னை: தமிழகத்தில் புலிகளை ஆதரிக்கும் கட்சிகளின் கூட்டமாகவே தற்போது திமுக மாறியுள்ளது. அனைத்துக்கட்சி கூட்டம் கூடுவதற்கு முன்னதாகவே தோல்வி அடைந்துவிட்டது என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணி சாமி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கை பிரச்சனை தொடர்பாக விவாதிக்க முதல்வர் கருணாநிதி அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் கட்சிகளின் கூடாரமாகவே தற்போது திமுக மாறியுள்ளது என்று அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அது முற்றிலும் உண்மைதான்.
எனவே, முதல்வர் கூட்டியுள்ள இந்த அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாகவே தோல்வி அடைந்து விட்டது.
இலங்கை பிரச்சனையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலக திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தயாராக இல்லை என்பதால் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம் அவர்களது உறுதியற்ற தன்மையை பிரதிபலிப்பதாகவே அமையும்.
அனைத்துக் கட்சி கூட்டம் என்ற பெயரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்த வெளிநாட்டு தீவிரவாத அமைப்பான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக மக்களின் பணம் வீணாக்கப்படுகிறது என்று கூறியுள்ளார் சாமி.
-
Heavy Rain: அடுத்த ஒரு மணி நேரம் விடாமல் கொட்டப்போகுது மழை.. குமரி, நெல்லைக்கு பறக்கு அலர்ட்! -
Gold Rate Today: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. ரூ.1,120 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு? -
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ்











Click it and Unblock the Notifications