அழகிரியை அடக்கி வைக்க முதல்வருக்கு ஜெ. வலியுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: முதல்வர் கருணாநிதி தன் மகன் மு.க. அழகிரியை அடக்கி வைக்க வேண்டும் ன்றும், இல்லாவிட்டால் மதுரை நகரில் மக்கள் வசிக்க முடியாமல் போய்விடும் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

மாநகராட்சியில் நடைபெறும் நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்தும், முதல்வர் கருணாநிதியின் மகன் அழகிரியின் அராஜகத்தை அடக்கக் கோரியும் அதிமுக சார்பில் இன்று மதைரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

தீவிரவாதிகளையும், சமூக விரோதிகளையும் எனது அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கியது. கருணாநிதி ஆட்சிப் பொறுப்பேற்றது அண்டை மாநிலங்களில் இயங்கி வந்த தீவிரவாத அமைப்புகள் தமிழகத்தை புகலிடமாக மாற்றிக் கொண்டன.

காவல் துறை, முதல்வர் கருணாநிதியின் ஏவல் துறையாகிவிட்டது. தங்களது உயிரையம் உடமைகளையும் மக்களே பாதுகாத்துக் கொள்கிற கட்டாயத்துக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் 7 ஆண்டு சிறைவாசம் அனுபவித்த 1405 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் பெரிய வன்முறைக்கு கருணாநிதி வித்திடுகிறாரோ என்று தோன்றுகிறது.

சட்டத்தையும் நீதிமன்றத் தீர்ப்புகளையும் பற்றி கவலைப்படால் தான் தோன்றித் தனமாக சிபிஎம் கவுன்சிலர் லீலாவதி படுகொலையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் திமுகவைச் சேர்ந்த குற்றவாளிகளையும், தனது மகன் அழகிரி மற்றும் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு வேண்டப்பட்ட குற்றவாளிகளையும் விடுவித்திருப்பது உள்நோக்கம் கொண்டதாகும்.

இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது செயல். கருணாநிதியின் இந்த அறிவிப்பால் விடுவிக்கப்பட்டவர்களும் வெளியில் உள்ள சதிகாரர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

'அண்ணனுக்கு நன்றி!'

மேலும் மதுரை முழுவதும் அண்ணனுக்கு நன்றி என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இது அழகிரியின் படையை விரிவாக்குவதற்காக கருணாநிதி இந்த செயலை செய்திருக்கிறாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

1405 கைதிகளை விடுதலை செய்து அவர்கள் துணையுடனும் ஏவல் துறையின் முழு ஒத்துழைப்புடனும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் முயற்சியில் கருணாநிதி ஈடுபட்டுள்ளார்.

ஒட்டுமொத்தத்தில் கைதிகள் விடுதலையை எதிர்க்கிறேன். இதன் காரணமாக மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமானால் அதற்கு முழு பொறுப்பு கருணாநிதியைத்தான் சேரும்.

அழகிரி அராஜகம்:

அழகிரியின் தலையீடு காரணமாக, மதுரையில் ஊழல் தலைவிரித்தாடுகிறது.

அழகிரி கைகாட்டும் நபர்களுக்கே அனைத்து ஒப்பந்தங்களும் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

அழகிரியை முதல்வர் உடனடியாக அடக்கி வைக்க வேண்டும். அரசின் நடவடிக்கைகளில் அவரது தலையீடு இருக்கவே கூடாது, என்று தன் அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+