மத்திய அரசு துரோகம்-கருணாநிதி பொறுப்பாளி: வைகோ

அவர் வெளியிட்ட அறிக்கையி்ல கூறியிருப்பதாவது:
ஈழத் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு இந்திய அரசு மறைமுகமாகவும் நேரடியாகவும் உதவி செய்து வருகிறது. தமிழகத்தில் திரட்டப்பட்ட உணவு, மருந்தைக் கூட செஞ்சிலுவை சங்கம் மூலம் விநியோகிக்க இந்திய அரசு அனுமதி மறுத்தது.
இலங்கையில் நடக்கும் தமிழினக் படுகொலையில் இந்திய அரசுக்கும் பங்கு உண்டு அந்த அரசில் அங்கம் வகிக்கும் திமுகவுக்கும் முழு பங்கு உண்டு.
இலங்கையுடன் ராணுவ ஒப்பந்தம் கூடாது என்று மத்திய அரசுக்கு கருணாநிதி ஏன் சொல்லவில்லை? இலங்கை விமானப்படைக்கு இந்தியா ராடார் கருவிகளை கொடுத்த துரோகத்துக்கு திமுக உடந்தைதானே?
இந்தியா-இலங்கை கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் ஏற்பட்டதை கருணாநிதி ஏன் எதிர்க்கவில்லை? இலங்கைக்கு இந்தி அரசு வட்டியில்லா கடனாக ரூ.500 கோடியை கொடுத்ததன் மூலம் பாகிஸ்தான், சீனாவில் ஆயுதங்களை வாங்க உதவியது துரோகம்தானே?
அதை ஏன் கருணாநிதி கண்டிக்கவில்லை? இலங்கை ராணுவத்துக்கும் விமானப்படைக்கும் பயிற்சி கொடுத்ததற்கும் திமுக உடந்தைதானே?
இலங்கைக்கு படையை அனுப்பலாமா என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நான் கடிதம் எழுதினேன். அதற்கு பதிலளித்த பிரதமர், இலங்கையில் ஒருமைப்பாட்டை காக்க இந்தியா ராணுவ உதவி செய்துள்ளது என்று ஒப்புக் கொண்டார்.
இந்திய அரசின் துரோம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது. இந்த துரோகத்துக்கு தமிழக முதல்வரும் பொறுப்பாளி. பழியில் இருந்து தப்பவே அனைத்துக் கட்சி கூட்டம் என்று நாடகம் நடத்துகிறார். மக்கள் இதற்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications