திருப்பதி: ஒரே நாளில் ரூ.1.65 கோடி வருமானம்!
திருப்பதி: திருப்பதி வெங்டாஜலபதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. நேற்று ஒரே நாளில் கோவிலுக்கு ரூ.1.65 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
பிரம்மோற்சவம் முடிந்த பிறகும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
புரட்டாசி மாதம் என்பதால இந்த மாதம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். புரட்டாசி மாதம் நாளை முடியவுள்ள நிலையில் பக்தர்கள் படையெடுத்த வருகின்றனர். சாமி தரிசனத்துக்காக 3 கி.மீ. தூரம் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.
ஏராளமான பக்தர்கள் விடுதி கிடைக்காததால் பிளாட்பாரம், பஸ் நிலையம், கோவில் வளாகம் போன்ற இடங்களில் தங்கியுள்ளனர்.
பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் ஆந்திர போக்குவரத்து கழகம் திருப்பதியில் இருந்து திருமலைக்கு கூடுதல் பஸ்களை இயக்கி வருகிறது.
கோவிலுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் இருப்பதால் கோவிலைச் சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.
தீவிர பரிசோதனைக்கு பிறகே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் உண்டியல் வருமானமாக ரூ.1.65 கோடி வசூலாகியுள்ளது. பிரம்மோற்சவத்தின்போது ரூ.15.79 கோடி வசூலானது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications