ஜெட் ஏர்வேசுக்கு தியோரா கண்டனம்
விமான நிறுவனங்கள் இந்த அளவுக்கு நஷ்டத்தில் மூழ்க நிதியமைச்சகமும் பெட்ரோலியத்துறையுமே காரணம் என விமானத்துறை இணையமைச்சர் பிரபுல் படேல் குற்றம் சாட்டியிருந்தார்.
விமான எரிபொருள் மீது வரிகள் என்ற பெயரில் இந்த இரு துறைகளும் பிழிந்து எடுத்ததால் தான் இந்த நிலை ஏற்பட்டது என்று கூறியிருந்தார்.
இதற்கு பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா மிகக் காட்டமாக இன்று பதிலடி தந்தார். டெல்லியில் நிருபர்களை சந்தித்த அவர்,
தீபாவளி வரும் நேரத்தில் தனது ஊழியர்களை ஜெட் ஏர்வேஸ் பணி நீக்கம் செய்தது மிகத் தவறான, துரதிஷ்டமான செயல். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்படுவதை ஜீரணிக்க முடியவில்லை. இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என நரேஷ் கோயலை கேட்டுக் கொள்கிறேன்.
முதலில் ஜெட் ஏர்வேசும், கிங் பிஷ்ஷரும் மத்திய அரசுக்கு தர வேண்டிய பணத்தை ஒழுங்காகக் கட்ட வேண்டும். விமான எரிபொருள் விலையை குறைக்கும் பேச்சுகே இடமில்லை என்றார்.
அவருடன் இருந்த பெட்ரோலியத்துறைச் செயலாளர் பாண்டே கூறுகையி்ல்,
ஜெட் ஏர்வேஸ் தான் வாங்கிய ரூ. 259 கோடி எரிபொருளுக்கான கட்டணத்தை இன்னும் செலுத்தவில்லை என்றார்.