ராமர் பாலம்-அரசுக்கு எதிராக சு.சுவாமி புதிய மனு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ராமர் பாலம் இந்து மதத்துக்கு தொடர்புடையதே அல்ல என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதற்கு எதிராக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், ராமர் பாலம் வழிபாட்டுத் தலமும் அல்ல. இது இந்து மதத்திற்கு தொடர்புடையதும் அல்ல என்று கூறியிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்பிரமணியம் சுவாமிஉச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும். இந்த வழக்கில் மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்த கருத்துக்கு, தற்போதைய கருத்து முரண்பாடாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.
சுவாமியின் மனுவை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications