இந்தியாவுக்கு உயர்மட்ட குழு அனுப்பும் ராஜபக்சே

இந்தக் குழு வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்திக்கும் எனத் தெரிகிறது.
இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமாகியுள்ள நிலையில் அங்குள்ள நிலைமை குறித்து மத்திய அரசிக்கு விளக்கமளிக்க இந்தக் குழுவை அதிபர் ராஜபக்சே இந்தியாவுக்கு அனுப்புகிறார்.
இந்தக் குழுவில் 5 எம்.பிக்கள் மற்றும் 2 மூத்த வெளியுறவு அதிகாரிகள் அடங்குவர். இத் தகவலை இலங்கை செய்தித்துறை அமைச்சர் லக்ஷ்மண் யபா அபேவர்த்தனே கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தவில்லை. புலிகள் மீது தான் நடத்துகிறாமா. மக்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் உள்ள வித்தியாசம் அரசுக்கு நன்றாகவே தெரியும்.
புலிகளுக்கு எதிரான போரில் அப்பாவி மக்கள் உயிர் இழப்பதை தடுக்க, இலங்கை அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications