பஞ். தலைவரை மிரட்டிய அதிமுக பிரமுகர் கைது
Subscribe to Oneindia Tamil
நாகை: நாகை நாகையில் பஞ்சாயத்து தலைவரை மிரட்டிய அதிமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
திட்டச்சேரி அருகே உள்ள திருகண்ணபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சிவஞானம் (48). அதே பகுதி்யில் வசிப்பவர் அதிமுக பிரமுகர் ஜெயபால் (45).
திருகண்ணாபுரம் ஊராட்சியில் 100 நாள் வேலை செய்த நபர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளத் தொகை உரிய நேரத்தில் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் சிவஞானத்திடம், ஜெயபால் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது ஊராட்சி மன்றத் தலைவர் சிவஞானத்தை ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும், கோடாரியை காட்டி மிரட்டியதாகவும் ஜெயபால் மீது போலீஸ் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து ஜெயபால் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications