வங்கிகளுக்கான கடன் வட்டியை குறைத்தது ரிசர்வ் வங்கி
மும்பை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன் தொகை மீதான வட்டி விகிதம் (repo rate) 1 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வங்கிகள் குறைந்த வட்டிக்கு பணம் பெற முடியும்.
சந்தையில் பணத் தட்டுப்பாட்டை நீக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதலில் வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய இருப்புத் தொகையை (cash rererve ratio-crr) மத்திய அரசு குறைத்தது.
இதன்மூலம் வங்கிகளின் கையிருப்புத் தொகை உயர்ந்தது. இந் நிலையில் வங்கிகளின் பத்திரங்கள் மீது ரிசர்வ் வங்கி அளிக்கும் கடன் தொகை மீதான வட்டியும் குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் வங்கிகளிடம் பணப் புழக்கம் அதிகரிக்கும். இந்தப் பணம் சந்தைக்கு வரும் என்பதால் சந்தையிலும் பணப் புழக்கம் அதிகரிக்கும்.
முதலில் பணவீக்கத்தை (சந்தையில் அதிக அளவில் பணம் இருப்பது) கட்டுப்படுத்த ரெபோ ரேட்டை மத்திய அரசு உயர்த்தியது. சிஆர்ஆர்யையும் அதிகரித்தது.
இப்போது பண வீக்கம் ஒரு கட்டுக்குள் வர ஆரம்பித்துள்ளதால் சந்தையில் பணப் புழகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
பணவீக்கம் குறையும்-ப.சி:
இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், இந்த ரெபோ ரேட் குறைப்பால் நாட்டின் வளர்ச்சி விகிதம் அதிகரித்து பண வீக்கம் குறையும். மேலும் விலைவாசியும் குறையும்.
இது கடன் கொடுக்கும் வங்கிகளுக்கும், கடனுதவி பெறுவோருக்கும் உதவிகரமாக இருக்கும்.
பங்குகள் ஏலம் நிறுத்தம்:
இதற்கிடையே ரூ. 10,000 கோடி மதிப்புள்ள அரசின் பங்குகளை ஏலம் விடத் திட்டமிட்டிருந்த ரிசர்வ் வங்கி அந்த திட்டத்தை தாற்காலிகமாக கைவிட்டுவிட்டது.
இந்த ஏலம் வேறு நாளில் நடக்கும் என அறிவித்துள்ளது.
-
வங்கதேசம் மட்டுமில்லை.. இந்தியாவிடம் கெஞ்சும் இலங்கை - மாலத்தீவு.. ஈரான் போரால் மாறிய நிலைமை -
ஹார்முஸ் முடங்கினாலும் பிரச்சனை வராது.. LPG சிக்கலுக்கு உள்நாட்டிலேயே இருக்கும் தீர்வு! இது தெரியுமா -
"கொரோனா டைம் போல.." ஒரு நொடி யோசித்து பிரதமர் சொன்ன வார்த்தை.. எல்பிஜி சிக்கல் அவ்வளவு மோசமா? -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட்












Click it and Unblock the Notifications