ஷாக்: மின் ஊழியர் உள்பட இருவர் பலி
Subscribe to Oneindia Tamil
தென்காசி: தென்காசி அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் உள்பட இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தென்காசி அருகேயுள்ள சடையப்பபுரத்தை சேர்ந்தவர் பேச்சிமுத்து கோனார். மின்கம்பத்தில் இருந்து இவரது வீட்டிற்கு வரும் வயர் பழுதடைந்துள்ளது. இதை சரி செய்வதற்காக மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர் பரமசிவம் நேற்று வந்தார்.
நேற்று மாலை பேச்சிமுத்து கோனார் வீட்டு வயரை பரமசிவம் சரி செய்து கொண்டிருந்தபோது பழுதடைந்த வயரில் இருந்து பரமசிவத்துக்கு ஷாக் அடித்தது. இதை பார்த்த பேச்சிமுத்து பரமசிவத்தை காப்பாற்ற முயன்றுள்ளார்.
இருவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மின்வாரிய ஊழியர்களும் விரைந்து வந்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். இச்சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications