சென்செக்ஸில் 405 புள்ளிகள் உயர்வு!
மும்பை: இந்திய பங்குச் சந்தைகள் இரண்டாம் நாளாக பச்சைக்குத் தாவி, பங்கு முதலீட்டாளர்களின் மனங்களைக் குளிர வைத்துக் கொண்டுள்ளன.
ஆசிய பங்குச் சந்தைகள் ஜப்பான், ஹாங்காங் மற்றும் சீனாவில் இன்று நல்ல முன்னேற்றம் இருந்ததால், இன்றைய வர்த்தக நேர ஆரம்பத்திலேயே 200 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கிய சென்செக்ஸ், இப்போது 405 புள்ளிகள் உயர்து 10628 ஆக உள்ளது.
தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 65 புள்ளிகள் உயர்ந்துள்ளது. பகல் 1 மணி நிலவரப்படி 3188 புள்ளிகளாக உள்ளது நிப்டி.
சர்வதேச பொருளாதார நெருக்கடிகள் காரணமாக, கடந்த வாரம் முழுவதும் சென்செக்ஸ் மற்றும் நிப்டியில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகளில் முதல்முறையாக சென்செக்ஸ் 10000 புள்ளிகளுக்கும் கீழிறங்கி முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
இன்றைய வர்த்தகத்தில் ரிலையன்ஸ், ஜெய்பிரகாஷ் அஸோஸியேட்ஸ், சத்யம் கம்ப்யூட்டர் மற்றும் நிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் பெருமளவு விற்பனையாகின.
கிராஸிம், மகிந்திரா அண்ட் மகிந்திரா, பார்தி ஏர்டெல் நிறுவனப் பங்குகள் கடும் சரிவுக்குள்ளாகின.












Click it and Unblock the Notifications