ஆள் கடத்தல் வழக்கு: பாஜக எம்.பி டிஸ்மிஸ்
டெல்லி: கடந்த ஆண்டு மனைவி, மகன் என்ற பெயரில் ஒரு பெண்ணையும், சிறுவனையும் வெளிநாட்டுக்கு மோசடியாக அழைத்துச் செல்ல முயன்று கைதான பாஜக எம்.பி. பாபபாய் கத்தாரா, எம்.பி. பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
குஜராத் மாநிலம் தஹோத் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பாபு பாய் கத்தாரா.
கடந்த ஆண்டு தனது மனைவி, மகன் ஆகியோரது பாஸ்போர்ட்களில் வேறு இருவரை மோசடியாக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல முயன்று கைதானார்.
இதுகுறித்து விசாரிக்க கிஷோர் சந்திர தியோ தலைமையிலான நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, பாபு பாய் கத்தாரா குற்றம் புரிந்தது நிருபணமாகியுள்ளதாகவும், எனவே அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் எனவும் பரிந்துரைத்தது.
இந்த பரிந்துரை அறிக்கை நேற்று லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தீர்மானம் ஒன்றை அவை முன்னவரான வெளியுறவு அமைச்சர் பிரணாரப் முகர்ஜி கொண்டு வந்தார். அப்போது அவர் கூறுகையில், ஒட்டுமொத்த உறுப்பினர்களின் மரியாதையையும் பாபு பாய் கத்தாராவின் செயல் சீர்குலைத்து விட்டது. எனவே அவர் அவையிலிருந்து நீக்கப்படுகிறார் என்று கூறினார்.
இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த தீர்மானம் நிறைவேறியது. இதையடுத்து பாபு பாய் கத்தாரா உறுப்பினர் பொறுப்பிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications