மன்மோகன் சிங் ஜப்பான், சீனா பயணம்
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பான் மற்றும் சீனாவில் 5 நாள் பயணமாக இன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோ புறப்பட்டுச் சென்றார்.
ஜப்பானில் 3 நாட்களும், சீனாவில் 2 நாட்களும் அவர் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். பெய்ஜிங்கில் நடைபெறும் ஐரோப்பா மற்றும் ஆசியாவைச் சேசர்ந்த 40 நாடுகள் கூட்டமைப்பின் (ஆசெம்) மாநாட்டிலும் பிரதமர் பங்கேற்கிறார். இந்த மாநாட்டிற்கு இந்தியா அழைக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.
சீன பயணத்தின்போது எல்லைப் பிரச்சினை தொடர்பாக சீனத் தலைவர்களுடன் பிரதமர் பேசுவார். சீன பிரதமர் வென் ஜியாபோவையும் பிரதமர் சந்திக்கிறார்.
ஜப்பான் பயணத்தின்போது மன்னர் அகிஹிட்டோ, பிரமதர் தாரோ அசோ ஆகியோரை அவர் சந்தித்துப் பேசுகிறார். ஜப்பான், இந்தியா இடையிலான இரு தரப்பு வர்த்தகத்தை மேலும் அதிகரிப்பது குறித்து முக்கியப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 15 பில்லியன் டாலராக உள்ளது.