ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு-ராமதாஸ்
டெல்லி: 2011ம் ஆண்டிலிருந்து நாடு முழுவதும் ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இது தொடப்பாக டெல்லியில் பாமக சார்பில் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் பங்கேற்றன.
அதில் பேசிய ராமதாஸ்,
சமூகநீதி விஷயத்தில் பத்திரிக்கைகள், டிவிக்கள் உள்ளிட்ட ஊடகங்கள் கண்ணை மூடிக் கொண்டு செயல்படுகின்றன. உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்காமல் ஒருதலை பட்சமாக, பாரபட்சமாக நடந்து கொள்கின்றன.
எனவே முதலில் ஊடகத்துறையிலும் இட ஒதுக்கீடு அவசியம்.
ஜாதிரீதியிலான கணக்கெடுப்பை நடத்தினால் தான் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு ஜாதியினரின் வறுமை நிலை, கல்வி நிலை குறித்து தெளிவாகத் தெரியவரும்.
இந்த புள்ளி விவரத்தை திரட்டாத வரை இட ஒதுக்கீட்டில் திருத்தம் கொண்டு வருவது சாத்தியமே இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications