நேரில் வந்து பார்க்கவும்..முகர்ஜிக்கு இலங்கை அழைப்பு

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியாவுடன் எங்கள் அரசு நல்லுறவைப் பேணுகிறது. தீவிரவாதத்தை ஒடுக்குவதில் இந்தியா-இலங்கை இடையே ஒருமித்த கருத்து நிலவுகிறது.
நாட்டின் வடக்குப் பகுதியில் மனித உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன என்பதை நேரில் காண இந்திய வெளியுறவு அமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.
மேலும் உலக சமுதாயத்துக்கும் இந்த விஷயத்தில் உரிய விளக்கம் அளிப்போம்.
இந்தியாவுக்கு குழு அனுப்புவது குறித்து இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதே நேரத்தில் இந்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.
தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் ராஜினாமா கடிதங்களைத் தந்திருந்தாலும் அமைச்சர்கள் யாரும் இதுவரை விலகவில்லை.
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஜனநாயகத்தை நிலைநாட்டவே அரசு விரும்புகிறது. தீவிரவாதிகளிடம் (புலிகள்) இருந்து கிழக்குப் பகுதியை மீட்டு அங்கு ஜனநாயகம் தழைக்கச் செய்தோம் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
விரைவிலேயே வடக்கிலும் தீவிரவாதம் முறியடிக்கப்படும். அதன் பின்னர் முல்லைத் தீவும், வன்னியும் அதன் மக்களும் ஜனநாயகப் பாதையில் இணைவர் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications