பலாத்கார முயற்சி-ஆசிரியருக்கு முன்ஜாமீன் மறுப்பு
மதுரை: இருபது வயது இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற பள்ளி ஆசிரியருக்கு முன் ஜாமீன் வழங்க மதுரை உயர் நீதி மன்ற கிளை மறுத்து விட்டது.
திருநெல்வேலி மாவட்டம், சேரமான்தேவி அருகே உள்ளது உலகன்குளம்.
இந்த ஊரைச் சேர்ந்தவர் தமிழகன். இவரது மகள் ஜோதி.
சில நாட்களுக்கு முன்பு ஜோதி வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் அருகில் வசிக்கும் பள்ளி ஆசிரியர் ஆம்ஸ்ட்ராங் ஜோதியை பலாத்காரம் செய்ய முன்றுள்ளார்.
இது குறித்து ஜோதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளி ஆசிரியர் ஆம்ஸ்ட்ராங்கை வலை வீசி தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளி ஆசிரியர் ஆம்ஸ்ட்ராங் தனக்கு இந்த வழக்கில் முன் ஜாமின் வழங்க கோரி மதுரை உயர் நீதி மன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி பாஷா, மனுதாரார் மீது கடுமையான குற்றச்சாட்டு உள்ளது. இது ஒரு கேவலமான செயலாகும். இந்த நிலையில் இவருக்கு முன் ஜாமீன் வழங்குவது சரியாகாது என்று கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.












Click it and Unblock the Notifications