மதுரையில் 2 ரயில் பெட்டிகள் எரிந்து சாம்பல்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை ரயில் நிலைய யார்டில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ரயில் பெட்டிகள் எரிந்து சேதமடைந்தன. இது சதியா என்பது குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மதுரை ரயில்வே யார்டில் இன்று நிறுத்தப்பட்டிருந்த ஒரு ரயிலின் இரு பெட்டிகளில் திடீரென தீப்பிடித்தது. இதில் ஒரு பெட்டி முழுவதும் எரிந்து சாம்பலானது. ஒரு பெட்டி பாதி எரிந்து போனது.
தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இது சதியா அல்லது விபத்தா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications