சென்செக்ஸ் 11% சரிவு.. 9000 புள்ளிகளுக்கு கீழே!

இன்று காலை வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சரியத் தொடங்கிய பிற்பகலில் 1,070 புள்ளிகளை இழந்தது.
அதே போல தேசிய பங்குச் சந்தையான நிப்டியின் குறியீட்டு எண் 359 புள்ளிகளை இழந்தது.
இதனால் பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு பல லட்சம் கோடிகள் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்திய பங்குச் சந்தைக்கு ஜான் ஏறினால் மீட்டர் சறுக்குகிறது. கடந்த இரு வாரங்களில் இரண்டு நாட்கள மட்டுமே சென்செக்ஸ் முன்னேற்றத்தைச் சந்தித்தது.
இந் நிலையில் இன்று பங்குச் சந்தை துவங்கியபோதே 274 புள்ளிகள் வீழ்ந்தன. அடுத்த சில நிமிடங்களில் இந்த வீழ்ச்சி பெரும் சரிவாக மாறியது. பிற்பகல் 11 மணிக்கு 550 புள்ளிகளுக்கும் அதிகமாக இழந்தது சென்செக்ஸ். 11.30 மணி நிலவரப்படி 9218 புள்ளிகளாக இருந்தது சென்செக்ஸ்.
பின்னர் 700 புள்ளிகளை இழந்து சென்செக்ஸ் 9000 புள்ளிகளுக்குக் கீழே போனது. இதையடுத்து கொஞ்சம் தாக்குப் பிடித்து புள்ளிகள் உயர்ந்தன.
ஆனால், மாலையில் 1070 புள்ளிகள் வரை சரிந்து, 2005ம் ஆண்டுக்குப் பின் இதுவரை இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்து. மாலையில் வர்த்தகம் முடிவடைந்தபோது குறியீட்டு எண் 8,701 என்ற நிலையில் இருந்தது. இது நேற்றைய மார்க்கெட் நிலவரத்துடன் ஒப்பிடுகையில் 11 சதவீத இழப்பாகும்.
அதே போல நிப்டி 116 புள்ளிகளை இழந்து 2,827 புள்ளிகளில் தடுமாறிக் கொண்டிருந்த்து. பின்னர் இந்த இழப்பு 224 புள்ளிகளாக உயர்ந்தது. மாலையில் இழப்பு 359 புள்ளிகனானது. இது நேற்றைய நிலவரத்தை விட 15 சதவீத இழப்பாகும். வர்த்தகம் முடிந்தபோது நிப்டியின் குறியீட்டு எண் 2,584 என்ற நிலையில் இருந்தது.
நிப்டியின் வரலாற்றிலேயே இது இரண்டாவது முறை ஏற்பட்டுள்ள மிகப் பெரிய சரிவாகும். சென்செக்சுக்க இது 3வது மாபெரும் சரிவாகும்.
தினசரி வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் உஷாராக ஒதுங்கிக் கொண்டனர். புளூசிப் பங்குகளை வாங்குவதிலும் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டவில்லை.
இன்று ரிசர்வ் வங்கி தனது இடைக்கால நிதிக் கொள்கையை அறிவித்தது. இதனால் பங்குச் சந்தையில் இந்த வீழ்ச்சி ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications