புதுச்சேரி: கருணாநிதி-திருமா கொடும்பாவி எரிப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில், தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் விடுதலைச் சிறுத்ைதகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரின் கொடும்பாவிகளை எரித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து எம்.எல்.ஏக்கள் அன்பழகன், ஓம் சக்தி சேகர் உள்ளிட்ட 7 அதிமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் இன்று அதிமுகவினர் மாநில செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ, இன்னொரு எம்.எல்.ஏவான ஓம் சக்தி சேகர் தலைமையில் கருணாநிதி, திருமாவளவன் கொடும்பாவிகளை எரித்துப் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து போலீஸார் அவர்களைக் கைது செய்து புதுச்சேரி தீயணைப்புப் படை அலுவலகத்திற்குக் கொண்டு சென்றனர்.
அவர்களை பின்னர் விடுவிக்க போலீஸார் முடிவு செய்திருந்தனர். ஆனால் தங்களை ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவுகளின் கீழ் கைது செய்ய வேண்டும் என அதிமுகவினர் வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் கைது செய்த 7 பேர் மீதும் ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். அப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவியதால் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் கொடும்பாவியை எரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்கள் 7 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீதும் ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications