அரிசி ஆலையில் 7 கொத்தடிமைகள் மீட்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு அரிசி ஆலையில் கொத்தடிமைகளாக இருந்த 2 குடும்பகங்களை அதிகாரிகள் மீட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மானாமதி அடுத்த ஆமூர் என்ற கிராமத்தில் லட்சுமி நாராயண ரெட்டி என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலை உள்ளது. இதில் இருளர் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பத்தினர் கொத்தடிமைகளாக இருப்பதாக செங்கல்பட்டு தனி துணை வட்டாட்சியர் மரியாதாஸூக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மரியதாஸ், வருவாய்த்துறை அலுவலர் மற்றும் போலீஸார் அந்த அரிசி ஆலையில் சோதனை செய்தனர். அப்போது புன்னப்பட்டு மற்றும் தீதானம் கிராமத்தைச் சேர்ந்த இருளர் குடும்பத்தினர் கொத்தடிமைகளாக இருந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக அரிசி ஆலை உரிமையாளர் லட்சுமி நாராயண ரெட்டி, அவரது மகள் தேவி ஆகியோர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அரிசி ஆலையில் இருந்து புன்னப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பையன் (32), அவரது மனைவி லலிதா (27), மகள் பிரியா (16), மகன்கள் வேலு (9), பிரசாந்த் (8) மற்றும் தீதானம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா (41), அவரது மனைவி நாகம்மாள் (31) ஆகியோரை மீட்கப்பட்டனர். பின்னர் அவர்களை தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications