வைகோ பேச்சு: சட்டம் சொல்வது என்ன?
சென்னை: விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக தானும் கண்ணப்பனும் பேசியதில் எந்தத் தவறும் இல்லை என்கிறார் வைகோ.
ஆனால் வைகோ பேசியது இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றமே என்கிறது காவல்துறை.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124 (ஏ): பிரிவினையை தூண்டுகிற வகையில் பேசினாலோ, எழுதினாலோ, அச்சிட்டு மற்றவர்கள் பார்வைக்கு தெரியும்படி செய்தாலோ அது தண்டனைக்குரிய குற்றம். இதற்கு 3 ஆண்டு முதல் ஆயுள் சிறை தண்டனை வரை விதிக்கலாம். கடுமையான அபராதமும் விதிக்கலாம் என்கிறது சட்டம்.
சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் 1967, பிரிவு 13 (1) பியின் படி சட்ட விரோத செயல்களில் பங்கேற்றாலோ, அதற்கான ஆலோசனை வழங்கினாலோ அல்லது வாதிட்டாலோ, சட்ட விரோதமாக கூடுவதற்கு தூண்டினாலோ அது தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கும் 7 ஆண்டு வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
வைகோ பேச்சு இந்த இரு பிரிவுகளுக்குள்ளும் வருவதாக காவல்துறை அறிவித்துள்ளது.