For Quick Alerts
For Daily Alerts
Just In
வங்கி டெபாசிட்டுகள் பத்திரமாக உள்ளன-அரசு
டெல்லி: நாட்டின் வங்கிகளில் மொத்தமுள்ள டெபாசிட்டுகளில் 92.6 சதவீதம் பாதுகாப்பாக உள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பவன் குமார் பன்சால் அளித்த எழுத்துப்பூர்வ பதில்:
மார்ச் 2008 அன்று வரை நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளிலும் உள்ள டெபாசிட்டுகளில் 92.6 சதவீதம் 'வைப்பு மற்றும் கடன் காப்புறுதி கழகத்தால்' பாதுகாக்கப்பட்டுள்ளன.
சிறு முதலீட்டாளர்கள மற்றும் நடுத்தர மக்களைக் காக்கவே இந்த நடவடிக்கை. ஏதாவது ஒரு வங்கி கலைக்கப்பட்டாலே, மறு நிர்மாணம் செய்யப்பட்டலோ அல்லது வேறு வங்கியுடன் இணைக்கப்பட்டாலோ, முதலீட்டாளர்களுக்கு உடனடியாக ரூ.1 லட்சம் வரை திருப்பித் தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Comments
Story first published: Saturday, October 25, 2008, 13:06 [IST]