For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தப் பிள்ளைகள் எந்தத் தவறும் செய்யவில்லை: பாரதிராஜா

By Staff
Google Oneindia Tamil News

Bharathiraja
சென்னை: இந்தப் பிள்ளைகள் (சீமான், அமீர்) எந்தத் தவறும் செய்யவில்லை. இவர்கள் விடுதலையாகும் வரை தமிழ் இன உணர்வுள்ள எந்த இயக்குவரும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.

இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாரதிராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த இரண்டு பிள்ளைகளும் எந்தத் தவறும் செய்யவில்லை. பதவிக்காக இவர்கள் போராடவில்லை. தமிழர்களுக்காக, தமிழ் உணர்வுடன் போராடினார்கள்.

உலகில் எந்த நாட்டிலும் ராமேஸ்வரம் போராட்டத்தைப் போல திரைப்பட இயக்குநர்கள் மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியதில்லை. இவர்கள் இருவரும் சிறையிலிருந்து விடுதலையாகும் வரை தமிழ் இன உணர்வுள்ள எந்த இயக்குநரும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X