குண்டுவெடிப்பு-2 ராணுவ வீரர்களுக்கு தொடர்பு!
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக பெண் சாமியார் கைதாதியுள்ள நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஒரு மேஜர் உள்பட இரு முன்னாள் ராணுவத்தினரும் பிடிபட்டுள்ளனர்.
மாலேகானில் கடந்த மாதம் 29ம் தேதி சிமி அலுவலகம் முன்பு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 5 பேர் பலியா னார்கள். 90 பேர் படுகாயம் அடைந்தனர். இதேபோல குஜராத் மாநிலம் மோடாசா நகரிலும் குண்டுவெடித்தது. அதில் ஒருவர் பலியானார்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மோட்டார் சைக்கிளில் மர்ம மனிதர்கள் வெடிகுண்டுகளை கட்டி எடுத்து வந்து வெடிக்க வைத்திருப்பது தெரிந்தது. டைமர் கருவி பொருத் தப்பட்டிருந்த அந்த வெடி குண்டு ஆர்.டி.எக்ஸ் மற்றும் அமோனியம் நைட்ரேட் கலவையால் தயாரிக்கப்பட்டிருந்தது.
தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் இது பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினார்கள். மோட்டார் சைக்கிளை ஆய்வு செய்த போது, அது மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்டிருப்பது தெரிந்தது. இது தொடர்பாக போலீசார் சியாம் சாகு, திலீப்நாசர், சிவநாராயண்சிங் ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் மூன்று பேரும் பெண் துறவி பிரக்யா தாகூர் என்பவருக்கு நெருக்கமானவர்கள். இவர் இந்து ஜாகிரன் மஞ்ச் அமைப்பைச் சேர்ந்தவர். பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், உமாபாரதி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் இந்து ஜாகிரண் மஞ்ச்சில் இணைந்த பின்னர் துறவியானார். பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். ராமஜென்மபூமி போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வந்தேமாதரம் என்ற அமைப்பைத் தொடங்கினார். அதற்கு குஜராத் அரசு நிதியுதவி அளித்ததால், குஜராத் மாநிலம் சூரத்திற்கு இடம் மாறினார் பிரக்யா.
மாலேகான் குண்டுவெடிப்பில் சிக்கிய மோட்டார் சைக்கிள் இவரது பெயரில்தான் பதிவாகியிருந்தது. இதையடுத்தே இவருக்கு குண்டுவெடிப்பில் தொடர்பு இருக்கலாம் என்ற முடிவுக்கு போலீஸார் வந்தனர்.
சிமி இயக்கத்தினரை பழிக்குப் பழி வாங்க இந்த குண்டு வெடிப்புகளை பெண் சாமியார் உள்ளிட்ட குழு நடத்தி இருக்கலாம் என்று கருதப்பட்டது. இதை தொர்ந்து பெண் சாமியார் பிரக்யாவை போலீசார் கைது செய்தனர். இது சங் பரிவார் அமைப்புகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராணுவத்தினருக்கு தொடர்பு:
இதற்கிடையே இந்த வழக்கில் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 2 வீரர்களும் கைதாகியுள்ளனர். இருவரும் தற்போது இந்து ராணுவப் பயிற்சிக் கழகம் என்ற பயிற்சிப் பள்ளியை நடத்தி வருகிறார்கள்.
இந்த பயிற்சிப் பள்ளியில் வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்று வகுப்புகள் நடத்தப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் பெயர் பிரபாகர் குல்கர்னி மற்றொருவர் பெயர் உபாத்யா. இவர் ராணுவத்தில் மேஜர் அந்தஸ்தில் பணியாற்றியவர். 2 ராணுவ வீரர்களும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் ஆவர்.
வெடிகுண்டு தயாரிக்க இவர்கள் ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்தை சேகரித்து அனுப்பி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. கைதான பெண் சாமியார் உள்பட 2 ராணுவ அதிகாரிகளையும் போலீசார் விசாரணைக்காக மும்பை கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவர்களிடம் தீவிர விசாரணையில் நடத்தியதில் குண்டு வெடிப்பில் இந்து அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
ராணுவ அதிகாரிகள் குல்கர்னியும், உபாத்யேயும் நாசிக் அருகே ராணுவ பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வந்தனர். இந்த பயிற்சி மையத்தை இந்து ராணுவ கல்வி கழகம் நடத்தி வந்தது.
அதில் வெடிகுண்டுகள் தயாரித்தல், வெடிகுண்டு களை கையாள்வது குறித்து இரு அதிகாரிகளும் பயிற்சி அளித்து வந்துள்ளனர். மற்றும் ஆயுதப் பயிற்சியும் கொடுத்தனர்.
இதற்கிடையே மாலேகானில் 2006-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பிலும் இந்து அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். அதுகுறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications