For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாலத்தீவு தேர்தலில் கயூம் தோல்வி-அதிபராகும் நஷீத்

By Staff
Google Oneindia Tamil News

Mohamed Nasheed
மாலே: மாலத்தீவில் நடந்த தேர்தலில் அந் நாட்டு அதிபர் மெளமூன் அப்துல் கயூம் தோல்வியடைந்துள்ளார். அவரால் சிறை வைக்கப்பட்ட அரசியல் கைதியான முகம்மத் நஷீத் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றினார்.

இதன்மூலம் ஆசியாவிலேயே தொடர்ந்து நீண்ட காலம் ஆட்சியில் இருந்தவரான, கிட்டத்தட்ட 30 ஆண்டுகள், கயூம் பதவியிழக்கிறார்.

1978ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தவர் கயூம். அதன் பின்னர் ஒழுங்கான தேர்தலை நடத்தவேயில்லை. சர்வதேச நெருக்கடி காரணமாக இப்போது தான் முதன் முறையாக ஜனநாயகரீதியில் தேர்தல் நடந்தது. அதில் கயூம் 46 சதவீத வாக்குளை மட்டுமே பெற்றார்.

உலக பொது மன்னிப்பு அமைப்பான ஆம்னஸ்டி இன்டர்நேசனால் மனசாட்சியின் கைதி என வர்ணிக்கப்பட்ட நஷீத் 54 சதவீத வாக்குகளை வென்று ஆட்சிக்கு வருகிறார்.

அரசுக்கு எதிராக குரல் தந்ததால் கடந்த 1989ம் ஆண்டு முதல் 13 முறை சிறையில் அடைக்கப்பட்டவர் நஷீத் என்பது குறிப்பிடத்தக்கது. சிறையி்ல் நடத்தப்பட்ட தாக்குதலில் இவரது கால் உடைந்தது.

ஒரு கட்டத்தில் கடும் நெருக்கடிக்கு ஆளான இவர் பிரிட்டனில் அரசியல் தஞ்சம் புகுந்தார். பின்னர் நாடு திரும்பி அரசுக்கு எதிரான போராட்டங்களை தலைமையேற்று நடத்தினார்.

அரசியல் எதிர்ப்பாளர்களை ஆளில்லா தீவுக்கு கடத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் கயூம் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X