For Daily Alerts
Just In
இந்திரா நினைவு தினம்-தலைவர்கள் அஞ்சலி
டெல்லி: மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் 24வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், துணை குடியரசுத் தலவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது புதல்வர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் டெல்லியில், சக்தி ஸ்தலத்தில் உள்ள இந்திரா நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர். பஜனை நிகழ்ச்சியும் நடந்தது.
மேலும் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட சப்தர்ஜங் இல்லத்தி்ற்கும் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் சென்று அஞ்சலி செலுத்தினர்.
Comments
Story first published: Friday, October 31, 2008, 16:59 [IST]