காவிரி- கட்டளை- குண்டாறு நதிகளை இணைக்க ரூ.169 திட்டம்
சென்னை: தமிழக நதிகளை இணைக்கும் திட்டத்தின் முதல்படியாக காவிரி- கட்டளை- குண்டாறு நதிகளை இணைக்க ரூ. 169 கோடியில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் விடுவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது என பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், கடந்த ஆட்சியில் கருணை அடிப்படையில் பணி நியமனத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பின் பொதுப்பணித் துறையில் காலியாக இருந்த இடங்களுக்கு கடந்த ஆண்டு 57 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இன்று 156 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழர்களின் இன்னல்களை நீக்க பொதுப்பணித் துறையினர் தங்களது ஒரு நாள் சம்பளத்தை வழங்கி உதவ வேண்டும்.
மாநிலத்தில் உள்ள நதிகளை மூன்று கட்டங்களாக இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
காவிரி- கட்டளை- குண்டாறு இணைப்புத் திட்டம் ரூ. 169 கோடி யில்நிறைவேற்றப்படும். இதற்கான டெண்டர் விடுவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.
அடுத்ததாக தாமிரபரணி- கருமேணியாறு இணைப்புத் திட்டத்தை ரூ. 369 கோடி ரூபாயில் நிறைவேற்றவுள்ளோம்.
இதைத் தொடர்ந்து தென்பெண்ணை- செய்யாறு இணைப்புத் திட்டம் எடுத்துக் கொள்ளப்படும்.
முல்லைப் பெரியாறு அணை பலமாக இருப்பதாக மத்திய அரசின் குழு அறிக்கை அளித்து, அதை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால், கேரள அரசு மட்டும் அந்த அணை பலமில்லை என்று கூறி, தீர்ப்பை மறுபரிசீலனை செய்யச் சொல்கிறது. அதற்கு அவசியமே இல்லை என மத்திய அரசும் தெரிவித்துள்ளது.
கேரளாவின் இந்தப் போக்கு, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு அந்த அரசு மதிப்பளிக்கவில்லை என்பதைத் தான் காட்டுகிறது என்றார் துரைமுருகன்.
-
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான்












Click it and Unblock the Notifications