பஸ்சில் ஆசிரியையை கொலை செய்த கணவர்
செஞ்சி: செஞ்சி பஸ் நிலையத்தில் பஸ்சில் அமர்ந்திருந்த அரசுப் பள்ளி ஆசிரியை அவரது கணவர் கத்தியால் குத்திக் கொலை செய்தார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அருள்நாட்டை சேர்ந்தவர் சாமுவேல் சவுரிராஜன் (45). இவரது மனைவி அகஸ்டின் குணவதி (27) உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் ஊராட்சி தொடக்கப்பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று காலை குணவதி உளுந்தூர்பேட்டை செல்லும் தனியார் பஸ்சில் அமர்ந்தார். அப்போது பஸ்சில் ஏறிய குணவதியின் கணவர் சாமுவேல் திடீரென மனைவியை கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டு தப்பி ஓடினார்.
பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை பஸ் டிரைவர் செஞ்சி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால் குணவதி வழியிலேயே இறந்தார்.
இந் நிலையில் சாமுவேல் செஞ்சி காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீசாரிடம் அவர் கூறுகையில்,
எனது மாமா மகளான குணவதியை 8 ஆண்டுகளாக காதலித்து அவரது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டேன்.
திருமணத்துக்கு பின் நாங்கள் சென்னை பரங்கிமலையில் குடியேறினோம். நான் லாரி டிரைவராக வேலை பார்த்தேன். எங்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந் நிலையில் குணவதிக்கு உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூரில் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைத்தது. இதனால் ஆசனூருக்கு குடி வந்தோம்.
நான் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தேன். நான் காலையில் வேலைக்கு சென்றால் இரவில் தான் வீட்டுக்கு வருவேன்.
குணவதி பணியாற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் லெனின் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வதாகவும், குணவதிக்கும் அவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாகவும் தெரிய வந்தது.
இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. துரோகம் செய்த குணவதியை பழிவாங்கவே அவரை கத்தியால் குத்தி கொன்றேன் என்று கூறியுள்ளார்
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications