மோட்டரோலா: 3000 பேர் நீக்கம்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பிரபல செல்போன் தயாரிப்பு நிறுவனம் மோட்டரோலா, தனது நிறுவனத்தின் பல்வேறு நாட்டுக் கிளைகளில் பணியாற்றும் 3,000 பணியாளர்களை நீக்க முடிவு செய்துள்ளது.

இதன் எதிரொலியாக, இந்நிறுவனத்தின் இந்தியக் கிளைகளில் பணியாற்றுபவர்களில் கணிசமானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனை மோட்டரோலாவின் இந்தியப் பிரிவு தலைவர் அமித் சவுத்ரி இன்று அறிவித்துள்ளார்.

சர்வதேச நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார தேக்க நிலை காரணமாக உலகெங்கிலும் பிரபல நிறுவனங்கள் சிக்கன நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக பணியாளர் குறைப்பு ஆயுதத்தை எடுத்துள்ளன. மிகப் பெரிய நிறுவனங்கள் கூட இதற்குத் தப்பவில்லை. நியூயார்க்கைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி தனது இந்தியப் பிரிவில் 150 பணியாளர்களை நீக்குவதாக நேற்றுதான் அறிவித்தது.

மோட்டாரோலாவும் அடுத்த நாளே பணியாளர் குறைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உலகெங்கிலுமுள்ள தனது பல்வேறு கிளைகளில் பணியாற்றும் 3000 பணியாளர்களை நீக்குவதாக இன்று மோட்டாரோலா அறிவித்துள்ளது.

இந்தியாவில் குர்கானைத் தமைமையிடமாகக் கொண்டு இயங்கும் மோட்டாரோலாவுக்கு சென்னை, மும்பை, பெங்களூருவில் கிளைகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 4 ஆயிரம் பணியாளர்கள் வேலை செய்கின்றனர்.

இவர்களில் 400 முதல் 500 பேர் வரை இப்போதைய பணி நீக்கத்துக்கு உள்ளாவார்கள் எனத் தெரிகிறது.

மூன்றாவது காலாண்டில் இந்நிறுவனத்துக்கு ரூ.1929 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பணியாளர் குறைப்பில் ஈடுபடப்போவதாக நான்கு தினங்களுக்கு முன் அறிவித்தது மோட்டாரோலா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+