மோட்டரோலா: 3000 பேர் நீக்கம்!
பெங்களூரு: அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பிரபல செல்போன் தயாரிப்பு நிறுவனம் மோட்டரோலா, தனது நிறுவனத்தின் பல்வேறு நாட்டுக் கிளைகளில் பணியாற்றும் 3,000 பணியாளர்களை நீக்க முடிவு செய்துள்ளது.
இதன் எதிரொலியாக, இந்நிறுவனத்தின் இந்தியக் கிளைகளில் பணியாற்றுபவர்களில் கணிசமானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனை மோட்டரோலாவின் இந்தியப் பிரிவு தலைவர் அமித் சவுத்ரி இன்று அறிவித்துள்ளார்.
சர்வதேச நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார தேக்க நிலை காரணமாக உலகெங்கிலும் பிரபல நிறுவனங்கள் சிக்கன நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக பணியாளர் குறைப்பு ஆயுதத்தை எடுத்துள்ளன. மிகப் பெரிய நிறுவனங்கள் கூட இதற்குத் தப்பவில்லை. நியூயார்க்கைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி தனது இந்தியப் பிரிவில் 150 பணியாளர்களை நீக்குவதாக நேற்றுதான் அறிவித்தது.
மோட்டாரோலாவும் அடுத்த நாளே பணியாளர் குறைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உலகெங்கிலுமுள்ள தனது பல்வேறு கிளைகளில் பணியாற்றும் 3000 பணியாளர்களை நீக்குவதாக இன்று மோட்டாரோலா அறிவித்துள்ளது.
இந்தியாவில் குர்கானைத் தமைமையிடமாகக் கொண்டு இயங்கும் மோட்டாரோலாவுக்கு சென்னை, மும்பை, பெங்களூருவில் கிளைகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 4 ஆயிரம் பணியாளர்கள் வேலை செய்கின்றனர்.
இவர்களில் 400 முதல் 500 பேர் வரை இப்போதைய பணி நீக்கத்துக்கு உள்ளாவார்கள் எனத் தெரிகிறது.
மூன்றாவது காலாண்டில் இந்நிறுவனத்துக்கு ரூ.1929 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பணியாளர் குறைப்பில் ஈடுபடப்போவதாக நான்கு தினங்களுக்கு முன் அறிவித்தது மோட்டாரோலா.
-
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications