மீண்டும் தள்ளாட்டத்தில் பங்குச் சந்தை!
மும்பை: இந்திய பங்குச் சந்தையில் இன்று இறங்குமுகம்.
இன்று காலை பங்கு வர்த்தகத்துக்கான மணி அடித்ததும் சென்செக்ஸ் 364 புள்ளிகள் அடி வாங்கியது.
தனியார் நிறுவனங்ளின் தீவிர ஆட்குறைப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட எதிர்மறை காரணங்களால் வீழ்ச்சியில் தத்தளித்துக் கொண்டுள்ளது சென்செக்ஸ்.
டாடா, ஐசிஐசிஐ, ஜெயப்பிரகாஷ் அசோசியேட்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களின் பங்குகளில் கடும் விலை வீழ்ச்சி நிலவுகிறது. டாடா ஸ்டீல் ஒரு பங்கின் விலை 8 சதவிகிதம் வரை குறைந்துள்ளது.
பிற்பகல் 1 மணி நிலரப்படி சென்செக்ஸ் 10,000புள்ளி அளவுக்கு கீழே இறங்கிவிட்டது. 486 புள்ளிகள் சரிந்து 9,139ல் உள்ளது.
தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் இதே நிலை தான். இங்கு 109 புள்ளிகள் வீழ்ச்சியடைந்துள்ளன. நிப்டியின் தற்போதைய நிலவரம் 2,885 புள்ளிகள்.
ஆசியப் பங்குச் சந்தைகளான கொரியாவின் கோப்ஸி, தைவான், சிங்கப்பூர் ஸ்ட்ரெய்ட், ஜப்பானின் நிக்கி, ஹாங்காங்கின் ஹாங்செங் ஆகியவையும் இன்று வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன.
சீனாவின் ஷாங்காய் பங்குச் சந்தையில் இன்று 2.5 சதவிகித வீழ்ச்சி காணப்பட்டது.












Click it and Unblock the Notifications