நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்
சென்னை: குளிர்காலத்தை முன்னிட்டுயில் சென்னையிலிருந்து நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோயில் மற்றும் திருச்சிக்கு சிறப்பு ரயில்களை இயக்குகிறது தெற்கு ரயில்வே.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
குளிர்கால, பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் நவம்பர் 8, 10, 15,17, 22, 14, 19, டிசம்பர் 1, 6, 8, 13, 15, 20, 22, 27, 29ம் தேதியும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகி்ன்றன.
இந்த சிறப்பு ரயில் எழும்பூரில் இருந்து மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.15 மணிக்கு நாகர்கோவிலைச் சென்றடையும்.
மறுமார்க்கததில் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு வரும் 9, 11, 16, 18, 23, 25, 30, டிசம்பர் 2, 7, 9, 14, 16, 21, 23, 28, 30 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.
எழும்பூர்- நெல்லை, தூத்துக்குடி:
மேலும், சென்னை எழும்பூரிலிருந்து நெல்லைக்கு வரும் 13, 20, 27, டிசம்பர் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் இரவு 8. 25 மணிக்கும்,
நெல்லையில் இருந்து எழும்பூருக்கு 14, 21, 28, டிசம்பர் 5, 12, 19, 26 ஆகிய நாட்களிலும் இந்த ரயில் இயக்கப்படும்.
நாகர்கோவிலில் இருந்து எழும்பூருக்கு 10, 17, 24, டிசம்பர் 1, 8, 15, 22, 29ம் தேதிகளில் இரவு 7.40 மணிக்கும், எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு 11, 18, 25, டிசம்பர் 2, 9, 16, 23, 30ம் தேதிகளில் சிறப்பு ரயில்களும்,
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு 10, 17, 24, டிசம்பர் 1, 8, 15, 22, 29ம் தேதி இரவு 11.45 மணிக்கும், மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து எழும்பூருக்கு 11, 18, 25 தேதிகளில் இரவு 8.45 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.
இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி, மீளவிட்டான், தூத்துக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும்.
தூத்துக்குடியில் இருந்து சென்னை வரும் சிறப்பு ரயில் மாம்பலத்தில் கூடுதலாக நின்று செல்லும்.
அதே போல், திருச்சியில் இருந்து சென்னைக்கு 9, 16, 23, 30, டிசம்பர் 7, 14, 21, 28 தேதிகளில் இரவு 8.30 மணிக்கும், சென்னையில் இருந்து திருச்சிக்கு 12, 19, 26, டிசம்பர் 3, 10, 17, 24, 31 தேதிகளில் இரவு 11.45 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இன்று முதல் முன் பதிவு:
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கியது. விறுவிறுப்பான முன் பதிவு நடந்து வருகிறது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
லக்கேஜ் லிமிட் வந்தாச்சு.. தெற்கு ரயில்வே திடீர் கண்டிஷன்! பயணிகள் தெரியாமல் இதை செஞ்சா ஸ்பாட் ஃபைன் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications