உத்தப்புரத்திற்குள் நுழைய அரசியல்வாதிகளுக்குத் தடை
மதுரை: சர்ச்சைக்குரிய உத்தப்புரம் கிராமத்திற்குள் அரசியல்வாதிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் தலித் சமுதாயத்தினருக்கும், பிள்ளைமார் சமூகத்தினருக்கும் இடையே பூசல் நிலவி வருகிறது. இதுதொடர்பாக தொடர்ந்து மோதல்கள் வெடித்தவண்ணம் உள்ளது.
உத்தப்புரம் அருகே உள்ள இ. கோட்டைப்பட்டியில் சமீபத்தில் பெரும் மோதல் வெடித்து துப்பாக்கிச் சூட்டில் முடிந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில் உத்தப்புரம், கோட்டைப்பட்டி, எழுமலை ஆகிய கிராமங்களுக்குள் அரசியல் கட்சித் தலைவர்களோ, அரசியல்வாதிகளோ நுழையக் கூடாது என போலீஸார் தடை விதித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக சட்டம், ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராஜேந்திரன் கூறுகையில், இந்த கிராமங்களில் இன்னும் ஒரு வாரத்திற்கு போலீஸ் பாதுகாப்பு நீடிக்கும். அதன் பின்னர் ஒரு வாரத்திற்கு நிலைமை கண்காணிக்கப்படும்.
இந்தக் கிராமங்களுக்குள் அரசியல் தலைவர்கள், அரசியல்வாதிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. யாரேனும் செல்ல விரும்பினால், போலீஸாரிடம் முன் கூட்டியே அனுமதி பெற வேண்டும். அந்தக் கோரிக்கையை நிராகரிக்கவோ, அனுமதிக்கவோ போலீஸாருக்கு முழு உரிமை உண்டு.
அரசு பேருந்துகளை சேதப்படுத்தியவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை அரசுப் பேருந்துகள் உள்பட 21 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
தலைவர்களின் சிலைகளுக்குப் பாதுகாப்பு அளிப்பது குறித்து பல்வேறு வழிகளை யோசித்து வருகிறோம். இருப்பினும் சிலைகளுக்கு இரும்புக் கூண்டுகளை அமைப்பதற்கு மக்கள் எதி்ர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே மாற்று ஏற்பாடுகள் குறித்து யோசிக்கப்படும் என்றார்.
இதற்கிடையே, தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தைச் சேர்ந்த குழு ஒன்று உத்தப்புரத்திற்கு இன்று வருகை தருகிறது. அவர்களுடன் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர்களும் வருகின்றனர்.
இக்குழுவினர் உத்தப்புரம், கோட்டைப்பட்டி, எழுமலை ஆகிய கிராமங்களுக்கு இன்று சென்று விசாரணை மற்றும் ஆய்வு செய்யவுள்ளனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications