பொள்ளாச்சி மகாலிங்கம் ரூ. 10 லட்சம்: ஈழத் தமிழர் நிதி ரூ.14 கோடியைத் தாண்டியது
சென்னை: இலங்கை தமிழர் நிவாரண நிதி ரூ. 14 கோடியைத் தாண்டியுள்ளது.
இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரண உதவி அளிக்க தமிழக அரசு நிதி திரட்டி வருகிறது. நிவாரணப் பொருட்களையும் அது சேகரித்து வருகிறது.
நிவாரண நிதிக்கு இதுவரை ரூ. 14 கோடியே 27 லட்சம் சேர்ந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
பொள்ளாச்சி மகாலிங்கம் ரூ. 10 லட்சம் உதவி:
தொழிலதிபரான அருட்செல்வர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் நிவாரண நிதியாக ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை நேற்று முதல்வர் கருணாநிதியிடம், தலைமைச் செயலகத்தில் சந்தித்து வழங்கினார். அப்போது அவரது மகன் பாலசுப்ரமணியமும் உடன் இருந்தார்.
விஜிபி குழுமம் சார்பில் ரூ. 3 லட்சத்திற்கான காசோலையை விஜிபி குழுமத் தலைவர் வி.ஜி.சந்தோஷம், வி.ஜி. செல்வராஜ், வி.ஜி.பி.ரவிதாஸ், வி.ஜி.பி. ராஜா தாஸ் ஆகியோர் முதல்வர் கருணாநிதியிடம் வழங்கினார்.
நிவாரண நிதிக்கு, கோவை மற்றும் சேலம் மத்திய சிறைக் கைதிகள் மொத்தமாக ரூ. 1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications