யு.எஸ். மாகாண தேர்தல்-3 இந்தியர்கள் வெற்றி
வாஷிங்டன்: அமெரிக்க மாகாணங்களுக்கு நடந்த தேர்தலில் 3 இந்தியர்கள் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். 3 பேரும் 50 சதவீதத்திற்கும் மேலான வாக்குகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 3 பேருமே ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
அதிபர் தேர்தலுடன் சேர்த்து மாகாண சட்டசபைகளுக்கும் தேர்தல் நடந்தது.
இதில் அயோவா மாகாணத்தில் போட்டியிட்ட ஸ்வாதி தண்டேகர், கான்சாஸ் மாகாணத்தில் போட்டியிட்ட ராஜ் கோயல், ஓஹையோ மாகாணத்தில் போட்டியிட்ட ஜெய் கோயல் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இவர்களில் தண்டேகர் 54 சதவீத வாக்குகளும், ராஜ் கோயல் 67 சதவீத வாக்குகளும், ஜெய் கோயல் 64 சதவீத வாக்குகளும் பெற்றனர்.
மற்ற இந்தியர்களான பால் சிங், டோனி டேல் ஆகியோர் முறையே கலிபோர்னியா, ஜார்ஜியாவில் தோல்வியுற்றனர்.
இவர்கள் தவிர கலிபோர்னியா நகர கவுன்சில் தேர்தலில் இந்தியர்களான அமர்பிரீத் தலிவால், ஆஷ் கல்ரா, சூசி நாக்பால், கிஷ் ராஜன், ஜேக் சித்து ஆகியோர் வெற்றி பெற்றனர்.












Click it and Unblock the Notifications