சென்னை விமான நிலைய பாதுகாப்பில் குறைபாடு: சர்வதேச நிறுவனம்
டெல்லி: சென்னை மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் சர்வதேச தரத்தில் இல்லை என்று சர்வதேச விமான நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்கும் நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் இந்தியப் பிரிவு இயக்குநர் டேணியல் மகூன் கூறுகையில், இந்தியாவின் அனைத்து பெரிய விமான நிலையங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் நான் பார்வையிட்டேன். அதில் சென்னை மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவர இல்லை என்பது தெரிய வந்தது.
மும்பை மற்றும் டெல்லி விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சர்வதேச தரத்துடன் உள்ளன.
உலகில் உள்ள விமான நிலையங்களில் 60 சதவீத பாதுகாப்பு ஏற்பாடுகளை லாக்ஹீட் நிறுவனம்தான் கவனித்து வருகிறது. இந்திய விமான நிலையங்களிலும் எங்களால் சர்வதேச தரத்துடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்க முடியும்.
விமான நிலையங்களில் ஏற்படக் கூடிய ஆபத்துக்கள் மற்றும் பாதுகாப்பு மிரட்டல்களை முன்கூட்டியே கணித்துக் கூறும் திறன் லாக்ஹீட் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கருவிகளிடம் உள்ளது.
பிரச்சினைகளை எளிதில் சரி செய்யக் கூடிய நவீன சாதனங்களும் எங்களிடம் உள்ளன. மேலும் விமானிகளுக்கு உதவக் கூடிய வகையிலான சிறப்பம்சமும் எங்களது நவீன சாதனங்களிடம் உள்ளன.
எரிபொருள் சேமிப்புக்கும் நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். உயர்ந்தபட்ச பாதுகாப்புக்கும் நாங்கள் உத்தரவாதம் தருகிறோம்.
உலகம் முழுவதும் 149 துறைமுகங்கள், 429 விமான நிலையங்களில் எங்களது பாதுகாப்பு தொழில்நுட்பம் அமலில் உள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications