இலங்கை நிவாரண நிதி: ரூ. 19 கோடியைத் தாண்டியது
Subscribe to Oneindia Tamil
சென்னை: இலங்கைத் தமிழர் நிவாரண நிதி ரூ. 19 கோடியைத் தாண்டியுள்ளது.
இலங்கைத் தமிழர்களுக்கு உதவ தமிழக அரசு நிவாரண நிதியை திரட்டி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தாராளமாக நிதியுதவி அளித்து வருகின்றனர்.
நேற்று பல்வேறு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் நிதியுதவி முதல்வர் கருணாநிதியிடம் அளிக்கப்பட்டது.
நேற்று மாலை நிலவரப்படி 19 கோடியே 23 லட்சத்து 62 ஆயிரத்து 547 ரூபாய் அளவுக்கு நிதி சேர்ந்துள்ளதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications