புலிகள் ஆயுதங்களை கீழே போடும் வரை போரை நிறுத்தம் இல்லை-இலங்கை

போர் நிறுத்தத்தை அறிவித்து தங்களை அவர்களது வலையில் சிக்க வைக்க புலிகள் முயல்வதாகவும் இலங்கை குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து அந் நாட்டு அமைச்சரும் பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளருமான தெகலிய ரம்புகவெல்லா கூறியுள்ளதாவது:
போர் நிறுத்தத்தைப் பொறுத்தவரை புலிகளின் நாடகத்தை இந்த நாட்டு மக்கள் பல முறை பார்த்து சலித்துவிட்டனர். தீவிரவாதத்தைக் கைவிட்டு ஆயுதங்களைக் கீழே போட்டால் மட்டுமே போர் நிறுத்தம் என்பது சாத்தியம்.
இது தொடர்பாக புலிகளி்ன் சதி வலையில் விழுந்து மக்களை கைவிட அதிபர் ராஜபக்சேவின் அரசு தயாராக இல்லை.
ஏகப்பட்ட சிவிலியன்கள் மற்றும் ராணுவத்தினர் தவிர அதிபரின் சகோதரர் கொதபய ராஜபக்சே மற்றும் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவைக் கொல்ல புலிகள் முயன்றதால் தான் இப்போதைய தாக்குதலையே தொடங்கினோம் என்றார்.
முன்னதாக போர் நிறுத்தத்துக்கு தயாராக இருப்பதாக புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நாங்கள் நடத்துவது தற்காப்புத் தாக்குதல் தான், தமிழர்களைக் கொல்வதைத் தடுக்கவே இந்தத் தாக்குதலில் புலிகள் ஈடுபட்டுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.
இந் நிலையில் தான் போரை நிறுத்த மாட்டோம் என அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications