'நளினி': சு.சுவாமியின் அப்பீல் மனு விசாரணைக்கு ஏற்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, கடந்த செப்டம்பர் 24ம் தேதி பிறப்பித்த உத்தரவில், மாநில அரசு நளினியின் கோரிக்கையைப் பரிசீலிக்க புதிய சிறை ஆலோசனைக் குழுவை நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
இதை எதிர்த்து சுப்பிரமணியம் சுவாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இன்று விசாரித்தது.
சுவாமி தான் தாக்கல் செய்திருந்த மனுவில், தனி நீதிபதியின் உத்தரவும், தீர்ப்பும், அரசியல் சட்டத்தின் ஷரத்துக்களுக்கு எதிரானது.
செப்டம்பர் 24ம் தேதியன்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
அரசியல் சட்டத்தின் 161வது பிரிவின் கீழோ அல்லது இந்திய குற்றவியல் சட்டத்தின் 433-ஏ பிரிவின் கீழோ தன்னை விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என்று நளினி கோர முடியாது. அதற்கு அவருக்கு உரிமையும் இல்லை.
நளினி செய்துள்ள குற்றம், அரிதிலும் அரிதான வழக்குகள் என்ற அம்சத்தின் கீழ் வருகிறது. தனி நபர் நலனை விட சமூக நலனே மிகவும் பெரியது. முக்கியமானது.
கற்றறிந்த தனி நீதிபதி, நளினிக்கு சாதகமாக எந்தவித அனுதாபத்தையும் காட்ட முடியாது என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த டிவிஷன் பெஞ்ச், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலம், சுவாமியின் மனு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications