சந்திராயன் வெற்றியைத் தொடர்ந்து சூரிய ஆய்வு விண்கலம்: இஸ்ரோ

இந்தியாவின் முதலாவது நிலவுப் பயணம் சந்திராயன்-1 வெற்றிகரமாகியுள்ளது. முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட விண்கலமான சந்திராயன்-1 நிலவை நெருங்கி விட்டது.
இதையடுத்து சூரியனை ஆய்வு செய்யும் விண்கலம் அனுப்பும் முயற்சிகளை இஸ்ரோ தொடங்கவுள்ளது.
சூரியனின் வெளிப் பகுதியான வெளிப்புறப் பகுதியான கொரானா, அதன் கதிர்வீச்சுகளை ஆதித்யா ஆய்வு செய்யும்.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் கூறுகையில், ஆதித்யா ஒரு மினி சாட்டிலைட். இதன் வடிவம் தயாராகி விட்டது. சூரியனிலிருந்து என்ன மாதிரியான கதிர்வீச்சுக்கள் நிகழ்கின்றன என்பதை ஆதித்யா ஆராயும்.
கொரானாவின் காந்தப் புலத்தின் அமைப்பு, சூரியனிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு்க்கள் உள்ளிட்டவை குறித்து இது ஆராயும்.
ஆதித்யாவுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி விட்டது. அதன் டிசைனும் தயாராகி விட்டது. இந்த ஆய்வு சற்று கடினமானது. உலகளவில் மிகச் சில நாடுகள்தான் இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளன என்றார் நாயர்.
ஆதித்யா திட்டத்தை வடிவமைக்கும் பணியில் இஸ்ரோ தலைமை விஞ்ஞானி ஜெயதி தத்தா ஈடுபட்டுள்ளார். சந்திராயனைப் போலவே, ஆதித்யா விண்கலமும் முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படவுள்ளதாக ஜெயதி தத்தா தெரிவித்துள்ளார்.
பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலமே ஆதித்யாவும் விண்ணில் செலுத்தப்படும்.
சூரியன் குறித்த ஆய்வில் அமெரிக்கா, ஜப்பான், கனடா, சீனா ஆகிய நாடுகள் ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications