பழைய பஸ் நிலையம் தொடர கோரி ராஜபாளையத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்
ராஜபாளையம்: ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் மூடப்பட்டதை கண்டித்தும், சொத்துவரி உயர்த்தப்பட்டதை கண்டித்தும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராஜபாளையத்தில் கடந்த 11 -ம் தேதி புதிய பேருந்து நிலையம் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.
இதனால், காந்திஜி பழைய பேருந்து நிலையத்தை நிரந்தரமாக மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாகத் கூறப்படுகிறது.
புதிய பேருந்து நிலையம் நகராட்சி எல்லைக்கு வெளியே அமைந்துள்ளதால், அந்த பகுதிகளில் உள்ள சில இடங்களில் தேவையான அளவு மின்வசதி செய்து தரப்படவில்லை என அதிமுக தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
பழைய பேருந்து நிலையம் செயல்படாததால் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனால், வழக்கம் போல் தொடர்ந்து பழைய பேருந்து நிலையம் செயல்பட வேண்டும் என்றும், 100 சதவீதம் சொத்துவரியை உயர்த்திய ராஜபாளையம் நகராட்சி நிர்வாகததை கண்டித்தும் விருதுநகர் மாவட்ட அதிமுக சார்பில், இன்று ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைற்றது.
இதில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளும், கட்சி தொண்டர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications