பாமக எம்.எல்.ஏ-வின் கைது கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: கபிலர்மலை தொகுதி பாமக எம்.எல்.ஏ நெடுஞ்செழியனை கைது செய்யக் கோரி விவசாயிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை அருகே தனியாருக்கு சொந்தமான காகித ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த காகித ஆலை கழிவால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி அந்த பகுதி விவசாயிகள் பல கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக கபிலர்மலை தொகுதி பாமக எம்.எல்.ஏ நெடுஞ்செழியன் செயல்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் கபிலர்மலை தொகுதி பாமக எம்.எல்.ஏ நெடுஞ்செழியன் மீது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் -க்கு விவசாயிகள் புகார் மனு அனுப்பினர்.

புகார் அனுப்பி விவசாயிகள் சிலரை எம்எல்ஏ நெடுஞ்செழியன் ஆதரவாளர்கள் தாக்கியதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் காரணமாக கபிலர்மலை தொகுதி பாமக எம்.எல்.ஏ நெடுஞ்செழியன் மீதும், அவரது ஆதரவாளர்கள் சிலர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

ஆனால் இந்த விவகாரத்தில் காவல்துறை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி விவசாயிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+