வங்கதேசத்தைப் போல இலங்கையில் இந்தியா தலையிட வேண்டும்: அதிமுக
சென்னை: வங்கதேசத்தில் தலையிட்டு அங்கு அமைதியை ஏற்படுத்தியதைப் போல, இலங்கை விவகாரத்திலும் இந்தியா தலையிட்டு தமிழர்களைக் காக்க வேண்டும், அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று சட்டசபை அதிமுக துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டசபையில் இலங்கை தொடர்பான தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், இலங்கை இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். இலங்கையில் அமைதி ஏற்படுத்தும் கடமையும், பொறுப்பும் இந்தியாவுக்கு உள்ளது.
வங்கதேசத்தில் இந்தியா தலையிட்டு அமைதியை ஏற்படுத்தியது. அதேபோல இலங்கையிலும் தலையிட்டு தமிழர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்.
இலங்கைப் பிரச்சினைக்கு இணக்கமான தீர்வு காண மத்திய அரசை திமுக அரசு தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.
போர் நிறுத்தம் முதலில் செய்யப்பட வேண்டும். அதன் பின்னர் இரு தரப்பினரையும் இந்தியாவுக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் அதே சமயத்தில், கச்சத்தீவை மீட்டு, தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும் அவலத்திற்கும் முடிவு கட்ட வேண்டும் என்றார்.
ஜி.கே.மணி
பாமக தலைவர் ஜி.கே.மணி பேசுகையில், உலகின் எந்த நாட்டிலும், 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு இனப் பிரச்சினை நீடித்து வருவது இதுவே முதல் முறையாகும்.
நிபந்தனையற்ற போர் நிறுத்தத்திற்கு இலங்கை அரசு சம்மதிக்க வேண்டும். அப்படி அது செய்ய மறுத்தால், இலங்கை மீது இந்தியா பொருளாதார தடையை அறிவித்து நெருக்குதலைக் கொடுக்க வேண்டும் என்றார்.
-
தமிழ்நாட்டில் வெப்பநிலை அடியோடு குறையப்போகுது.. வானிலை மையம் குட்நியூஸ் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு!












Click it and Unblock the Notifications