கோவை சட்டக் கல்லூரி சூறை; போலீஸ் தடியடி, 70 மாணவர்கள் கைது!!

Subscribe to Oneindia Tamil

Coimbatore law college
கோவை: சென்னை சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்கிடையே நடந்த வரலாறு காணாத, காட்டுமிராண்டித்தனமான மோதலைத் தொடர்ந்து, இன்று கோவை சட்டக் கல்லூரியிலும் வன்முறை வெடித்தது. தாங்கள் படித்த கல்லூரியையே சூறையாடி வெறியாட்டம் போட்டனர் ஒரு பிரிவு மாணவர்கள். இதைத் தொடர்ந்து தடியடி நடத்தி அவர்களைக் கலைத்த போலீசார், 70 மாணவர்களைக் கைது செய்தனர்.

முன்னதாக தேர்வெழுத வந்திருந்தவர்களை தேர்வு மையத்துக்குள் புகுந்து அடித்துத் துரத்தியது அந்தக் கும்பல்.

இதனால் கல்லூரி வளாகம் பெரும் பரபரப்புக்குள்ளானது. பெரும் கலவரம் மூள்வதற்கான சூழல் ஏற்பட்டதால், உடனடியாக போலீஸ் குவிக்கப்பட்டது.

கல்லூரிக்குள் இருந்த மாணவர்கள் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டது. கல்லூரி மூடப்பட்டது. தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. ஆனால் மாணவர்கள் கல்லூரியைவிட்டு வெளியேற மறுத்து கலவரத்தில் இறங்கினர்.

கல்லூரி சூறை:

கல்லூரி முழுவதும் பெரும் கலவரம் வெடித்தது. வகுப்பறைகளைச் சூறையாடினர் மாணவர்கள். வேறு வழியின்றி மாணவர்களை தடியடிப் பிரயோகம் செய்து கலைத்த போலீசார், 70 மாணவர்களைக் கைது செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+