கள்ள காதலியை பழிவாங்க 2 சிறுவர்கள் கடத்தி கொலை
தஞ்சாவூர்: தன்னுடன் உல்லாசத்திற்கு வர கள்ளக் காதலி மறுத்ததால் ஆத்திரமடைந்த நபர் அவரது இரு குழந்தைகளையும் கடத்திக் கொலை செய்தார்.
தஞ்சை மருத்துவ கல்லூரி ரோடு இந்திரா நகரை சேர்ந்தவர் முருகையன். இவர் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரேவதி (32). இவர்களுக்கு விக்னேஷ் (8), தினேஷ் (6) ஆகிய 2 மகன்கள்.
இரவு வீட்டில் ரேவதி சமைத்துக் கொண்டிருந்தபோது குழந்தைகள் இருவரும் வராண்டாவில் விளையாடிக் கொண்டிருந்தனர். ரேவதி சமைத்து விட்டு வெளியே வந்தபோது மகன்கள் இருவரையும் காணவில்லை.
இதுகுறித்து ரேவதி தஞ்சை மருத்துவக் கல்லூரி போலீசில் புகார் செய்தார். புகாரில் சரவணன் என்பவர்தான் தனது மகன்களை கடத்தி இருக்கலாம் எனக் கூறியிருந்தார்.
இந் நிலையில் பட்டுக்கோட்டை அருகே உள்ள வட்டாத்திகோட்டை வாய்க்காலில் ஒரு சிறுவனின் உடல் ஒதுங்கியதாக தகவல் கிடைத்தது. போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அது சிறுவன் விக்னேஷ் எனத் தெரியவந்தது.
இந் நிலையில் இன்று காலை கண்டிதம்பட்டு பாலத்தின் கீழ் இன்னொரு சிறுவன் தினேஷ் பிணம் மிதப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் விரைந்துசென்று உடலை கைப்பற்றினர்.
கள்ளக்காதல்..
இதையடுத்து ரேவதியிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் ரேவதிக்கும், சரவணனுக்கும் நீண்ட காலமாக கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் ரேவதியின் மகன்களுக்கு தங்களது தாயின் கள்ளக்காதல் குறித்து புரிய வந்துள்ளது. இதையடுத்து சரவணனுடனான நட்பை துண்டித்துக் கொண்டார் ரேவதி.
இதனால் ஆத்திரமடைந்தார் சரவணன். தான் அழைத்தும் ரேவதி வர மறுப்பதால், ரேவதியிடம் ஒரு நாள் உன் குழந்தைகளை கடத்தி உன்னை பரிதவிக்க வைப்பேன் என மிரட்டியுள்ளார். எனவே சரவணன்தான் கடத்திக் கொன்றிருக்கலாம் என ரேவதி போலீஸாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து போலீஸார் சரவணனைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications